For Daily Alerts
Just In
குப்பை மேட்டில் குண்டுவெடிப்பு .. பெண் சாவு
சாத்தூர்:
குப்பைமேட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்ததால் குப்பை பொறுக்கும் பெண்ஒருவர் இறந்தார்.
சாத்தூர் முனிசிபல் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரது மனைவிகிருஷ்ணம்மாள் (35). இவர் பழைய பேப்பர் எடுத்து அதை விற்று வருபவர்.
சம்பவ தினத்தன்று படந்தால் ரோட்டில் இருக்கும் முத்துராமலிங்கம் காலனி குப்பைமேட்டில் குப்பை எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு ஒரு இரும்பு வாளியைபார்த்தார். அதை எடுக்க முயற்ச்சி செய்த போது அதிலிருந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சிகிச்சைக்காககிருஷ்ணம்மாளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிற்றிகிருஷ்ணம்மாள் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]