மெரீனாவில் முளைத்த கடற் கன்னி கோவில் ...
சென்னை:
மெரீனா கடற்கரையில் கடற்கன்னி கோயில் அமைக்கும் முயற்சியை போலீஸார் முறியடித்தனர்.
சென்னை மெரீனா கடற்கரை, பெஸன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல்களின்நடமாட்டம் அதிகரித்தது. இதைத் தடுக்க இரவு 11.30 மணிக்கு மேல் கடற்கரையில் யாரும் இருக்கக் கூடாது என்றுஅந்தப் பகுதி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் படி போலீஸார் இரவு 11.30 மணிக்கு மேல் கடற்கரையில் படுத்துக் கொண்டிருப்பவர்களை கூட எழுப்பிஅனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சீரணி அரங்கத்தின் அருகே புல்தரையில் ஒரு அடி சாமிசிலை வைத்து பூஜிக்கப்பட்டது. இது போலீஸாருக்கு தெரிந்ததும் ஒடி வந்தனர்.
அங்கு இருந்த மக்களிடம் யார் இந்த வேலையை செய்தது என்று போலீஸார் கேட்டனர். உடனே அங்கிருந்த சிலர்,இந்த சிலை கடல்ல அடிச்சிட்டு வந்தது. இது கடற்கன்னி, இந்த கடற்கன்னி தான் எங்களை வாழவைக்கும்தெய்வம். கடல்ல அடிச்சிகிட்டு வந்த சிலையை கடற்கரையில தான் பூஜை பண்ணணும் என்று கூறினர்.
விசாரித்த போலீஸார், கோயில் அமைக்க முயற்சி செய்த கும்பலை விரட்டியடித்தனர்.












Click it and Unblock the Notifications