வங்கதேசத்தின் உலகக் கோப்பைக் கிரிக்கெட் கனவு
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்:
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்ற கையோடு, இப்போது 2010-ம் ஆண்டு உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்த வங்கதேசம் ஆர்வம் கொண்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அணி தேர்வாளர் ரகீபுல் ஹசன் இதுகுறித்துக் கூறுகையில், உலகக் கோப்பைப் போட்டியைநடத்துவது தொடர்பான திட்டத்தில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம். இது எங்கள் கனவு. அடுத்த ஐந்துஆண்டுகளில் அதை நிறைவேற்றுவது தொடர்பான பணிகளில் பாதியளவு முடித்து விடுவோம்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை முன்மாதிரியாக வைத்து வலுவான கிரிக்கெட் அணியை நாங்கள்உருவாக்கவுள்ளோம்.
13, 15, 17, 19 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் அணிகளுக்குப் பயிற்சி தர இலங்கையிலிருந்துபயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வலுவான, திறமையான வீரர்களைக் கொண்டதாக வங்கதேச அணியை மாற்றுவதே எங்களது நோக்கம் என்றார்அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications