இன்று எம்.ஜி.ஆர்.நினைவுதினம்
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுதினம் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
சென்னையில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். அவர் தனது கட்சித் தொண்டர்கள் 2500 பேருடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர்.சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில்தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும்.
கடந்த நான்கரை வருட ஆட்சியில் பழிக்குப்பழி வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கருணாநிதி. தனக்காகவும், தன்குடும்ப நலனுக்காகவும் அரசியலைப் பயன்படுத்திக் கொள்கிறார். மக்களின் தேவைகளையோ, எதிர்பார்ப்புக்களையோ அவர் கொஞ்சமும் உணர்ந்துகொள்ளவில்லை.
தற்போது ஸ்டாலினை அரசியலில் மிகப்பெரிய ஆளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கருணாநிதி என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர்எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
புதுவையில் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுவதையடுத்தது புதுவையில் அவருக்கு நினைவஞ்சலிசெலுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநில செயலாளர் ரவீந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் அந்த ஊர்வலத்தில்கலந்து கொண்டவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக, அதிமுக, திராவிடக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications