புதுவை முதல்வரை நீக்குங்கள் .. ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையில் நடந்து வரும் ஆட்சியைக் கலைத்து விட்டு புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னர்ரஜினிராயிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சண்முகம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சண்முகம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர,கவர்னர் உத்தரவிடவேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராய்க்கு டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள மனுவில், பாண்டிச்சேரியில் சண்முகம் அரசு பதவியேற்றதிலிருந்து பல பிரச்சனைகளைச்சந்தித்து வருகிறார்.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவரே முதல்வராக முடியும். ஆனால் முதல்வர் சண்முகமோ எம்.எல்.ஏ.வாக இல்லாமலேயே முதல்வர் ஆகி விட்டார்.அவரது அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கி விட்டனர். இந்த நிலையில் சண்முகம் அமைச்சரவையைக்கலைக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications