For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலிய கடலில் மூழ்கி இந்தியர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லேன்ட் கோல்ட் கோஸ்ட் கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற 19 பேரில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் நீச்சலடிக்க சென்றபோது கடலில் மூழ்கி இறந்தார்.

இவருடன் சுற்றுலா சென்ற 19 பேரும் நீச்சலடிக்கச் சென்றனர். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் மட்டும் கடலில் மூழ்கி இறந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எரால் ஜிப்சன் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாகக் கருதப்படுவதுகோல்ட் கோஸ்ட் கடற்கரை.

லீ வேர்ல்டு டவர் அருகேயுள்ள இந்தக் கோல்ட் கோஸ்ட் கடலில் நீச்சலடிப்பதற்காக 19 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள்கடலில் இறங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் நீச்சலடித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கரைக்கு வந்து தாங்கள் வந்த பஸ்சை நோக்கிச் சென்ற போதுதான் தங்களுடன் வந்த 24 வயது இந்திய வாலிபரைஒருவரைக் காணவில்லை என்று கண்டுபிடித்தனர்.

அதற்குப்பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கடலில் மூழ்கி இறந்த இந்தியரின் உடல் கைப்பற்றப்பட்டது. அவரது பெயர் மற்றும் இதர விவரங்கள்தெரியவில்லை என்றார் ஜிப்சன்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X