ஆனந்த் உலக செஸ் சாம்பியன்
டெஹ்ரான்:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன்ஆனந்த் வென்றுள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள முதல் இந்தியர் ஆனந்த் என்பதுகுறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் டெல்லியிலும் இறுதிப் போட்டிகள் ஈரான்தலைநகரான டெஹ்ரானிலும் நடைபெற்றன.
டில்லியில் நடந்த லீக் போட்ட்களில் பல இந்திய வீரர்கள் தோல்வியடைந்தாலும்கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து வெற்றி வாகை சூடியபடியேஇருந்தார்.
அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரரை வென்ற ஆனந்த் இறுதிப் போட்டிக்குதகுதி பெற்றார். இதன் மூலம் டெஹ்ரானில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் போட்டியில்ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவுடன் மோதினார்.
மிகவும் சிறந்த ஆட்டக்காரராக கருதப்படும் ஷிரோவுடன் ஆனந்த் மோதும் ஆட்டம்மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இறுதிச் சுற்றில் மொத்தம் 6 போட்டிகள்உண்டு.
ஆரம்பம் முதலே ஆனந்த் மிகவும் சிறப்பாக ஆடிவந்தார். முதல் போட்டியை ஆனந்த்டிரா செய்தார். இரண்டாவது போட்டியில் முதல் வெற்றியை பெற்றார். அதன் பின் எந்தபின்னடைவும் இல்லை. தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் நான்காவது போட்டி துவங்கியது. ஏற்கனவே மூன்றுபுள்ளிகள் பெற்றறிருந்ததால் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியை டிரா செய்தாலேஆனந்த் தோல்வியை தவிர்க்கும் நிலை இருந்தது.
ஆனந்த் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். ஷிரோவ் எப்படியும் இந்தஆட்டத்தை டிரா செய்து விட வேண்டும் என தடுப்பாட்டத்தில் ஈடுபட்டுவிளையாடினார். ஆனால், ஆட்டத்தின் 41-வது மூவில் அவர் தோல்வியடைந்தார்.
நான்காவது போட்டியில் வென்றதன் மூலம் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தைவென்றுள்ளார். இதனால் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களை நடத்த வேண்டியஅவசியமில்லாமல் போனது.
ஆனந்த் 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை உலக செஸ்சாம்பியன் பட்டத்தை ரஷ்ய வீரர்களே தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனந்த், ஆசியாவிலேயே முதல் முதலாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர்என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.