வாஜ்பாய்க்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி:
திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாயின் 77 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அமைச்சர்கள்,முக்கியப் பிரமுகர்கள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தன்னை வாழ்த்த வந்தவர்களிடம் வாஜ்பாய் கூறுகையில், புகழ்பெற்ற பலர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமைகொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து, மதன் மோகன் மாளவியா, மகாராஜ் சூரஜ் மால் ஆகியோர் டிசம்பர் 25 ம்தேதி பிறந்தனர். அதனால் எனது பிறந்தநாள் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததல்ல. இயேசு கிறிஸ்து பிறந்த இந்தநன்னாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிஆகியோர் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தினர். மத்தியஅமைச்சர்கள் பலரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமரின் பிறந்தநாளையொட்டி பள்ளிக்குழந்தைகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. பிரதமரின் இல்லத்துக்குநூற்றுக்கணக்கானோர் பரிசுப் பொருட்களுடனும், பூங்கொத்துக்களுடனும் வாழ்த்த வந்தனர். இருப்பினும்பிரதமரின் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications