மதுரையை புனித நகராக்க பா.ஜ.க. கோரிக்கை
மதுரை:
மதுரையை புனித நகராக அறிவிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி மாநாட்டில்கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை பாரதிய ஜனதா கட்சியினர் திங்கள் கிழமை கட்சி சார்பில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெரியார் அணை விவகாரத்தை மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 152அடி உயரத்துக்கு உயர்த்த உதவி புரிய வேண்டும்.
மதுரையை புனித நகராக அறிவிக்க வேண்டும். இங்குள்ள விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாகஅறிவிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மதுரை பிரிவு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்தபொதுக்கூட்டத்தில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் ஆகியோர்பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications