For Daily Alerts
Just In
இந்திய ஹாக்கி அணியை நிராகரித்தது பாகிஸ்தான்
லாகூர்:
பாகிஸ்தானின் கராச்சி அல்லது லாகூர் நகரில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள்ஹாக்கித் தொடரில் இந்தியாவையும் சேர்க்குமாறு, போட்டியை நடத்தவுள்ள தென்கொரிய நிறுவனம் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஹாக்கி கழகம் நிராகரித்துவிட்டது.
இந்தப் போட்டித் தொடருக்கு இந்தியாவை அழைக்கும் எண்ணம் இல்லை என்றுபாகிஸ்தான் ஹாக்கி கழக செயலாளர் முஸரத்துல்லா கான் கூறியுள்ளதாக அந்நாட்டுபத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தியாவை அழைக்கமறுப்பதற்கான காரணத்தை கான் கூறவில்லை.
இதையடுத்து இந்தத் தொடர் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டித் தொடராகும்வாய்ப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் தவிர, தென் கொரியா மற்றும் மலேசியாஆகிய நாடுகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]