சபரிமலையில் நாளை மண்டல பூஜை

Subscribe to Oneindia Tamil

பந்தனம்திட்டா:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 26-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது.

கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை டிசம்பர்மாதம் 26-ம் தேதி நிறைவடைகிறது. மண்டல பூஜையின் நிறைவு நாளன்று ஐயப்பனுக்கு தங்க அங்கிஅணிவிக்கப்படும். தங்க அங்கியை சபரிமலைக்கு எடுத்துவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடநத்வருகின்றன.

தங்க அங்கி 1974-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசராக இருந்த சித்திரை திருநாள் பலராம வர்மாவால் ஐயப்பனுக்குகாணிக்யாைக தரப்பட்டது. தங்கஅங்கி அரனமுலா பார்த்தசாரதி கோவிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது

தங்க அங்கி திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனையும்நடைபெறும். 26-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை முடிந்தவுடன்அத்தாழபூஜை நடைபெறும் அதன் பின் கோவிலின் நடை மூடப்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜை தரிசனத்திற்காக சபரிமலையில் குழுமியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைபக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட வரிசைகளில் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

மீண்டும் மகரஜோதி தரிசனத்திற்காக கோவிலின் நடை ஜனவரி மாதம் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.மகரஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நடக்கும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+