தஞ்சையில் மர்மமான முறையில் மயில் சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சருக்காய் கிராமத்தில் ஒரு மயில் இறந்தது. பல மயில்கள் சுகவீனமுற்றன.இதையடுத்து அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
சருக்காய் பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் வசிக்கின்றன. அங்குள்ள புதர்கள், வயலோரங்கள் மற்றும்ஆற்றங்கரையோரங்களில் அவை வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த மயில்களில் பல மயில்கள்சுகவீனமடைந்தன.
இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்ட மயில்களை பாபநாசம் கால்நடைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவற்றில் ஒரு மயில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தது.
இதுகுறித்து பாபநாசம் தாசில்தாரிடம் கிராமத்து மக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறைஅதிகாரிகளுக்கு தாசில்தார் தகவல் கொடுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications