சிலைகள் உடைப்பு: இந்து முன்னணி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்திங்கள்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கடைகள் அடைப்புப் போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி டவுன், மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்தப் போராட்டம் நடந்தது. இந்துமதத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலப்பாளையம், கணேசபுரம், அம்பை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சில கோவில்களில் வைக்கப்பட்டிருந்தகடவுள் சிலைகள் 23-ம் தேதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதைக் கண்டித்துஇந்து முன்னணி இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
போராட்டம் நடந்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. நிலைமை அமைதியாக இருந்ததாகபோலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications