ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை:
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழகமுதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டம்நடைபெற்றது. இது 6 ஆட்டங்கள் கொண்டது. ஆனந்த் ஸ்பெயின் வீரர் அலெக்சிஷிரோவை எதிர்த்து ஆடினார். கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தபோட்டியில் ஆனந்த் மிக எளிதாக வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யர்களே உலக சாம்பியன் பட்டம் வென்றுவந்தனர். விஸ்வநாதன் ஆனந்த் அந்த சாதனையை முறியடித்து ஆசியவிலேயே உலகசெஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
டெஹ்ரானில் இருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழக முதல்வர் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்தார். உலக சாம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு எனதுமனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக அரசின்சார்பில் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது எனவும் முதல்வர் கூறினார்.
விஸ்வநாதன் ஆனந்த் அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த மாதம் 29-ம் தேதிஇந்தியா திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ம.தி.மு.க. தலைவர் வைகோ விஸ்வநாதன் ஆனந்திற்கு வாழ்த்துச்செய்திஅனுப்பியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியாவிற்கு பெருமைசேர்க்கக்கூடியது. இந்த வெற்றி தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும்ஊக்கம் அளிக்கக்கூடியது என வைகோ தனது வாழத்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஆனந்திற்கு வாழ்த்துச் செய்திஅனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications