இந்துக்களுக்கு தனிவாரியம் தேவை: ராம.கோபாலன்
திருப்பூர்:
இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கோரிக்க விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் திருப்பூர் இந்து முன்னனியின் சார்பில் அரசின் பிடியில் ஆலயங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருப்பூர் டவுன் ஹால் கலையரங்கத்தில்நடைபெற்றது.
கருத்தரங்கில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் பேசியதாவது:
குருவாயூர், திருப்பதியில் பக்தர்கள் நல்ல தரிசனம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் அந்த வசதியில்லை. காரணம் அந்த கோவில்களில் வரும் வருமானத்தை அந்தநாட்டு மக்களுக்கே செலவு செய்கிறார்கள். திருப்பதியில் அந்த நாட்டு தலமைச்சர் கால்நடையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
மசூதி மற்றும் சர்ச்சுகளின் சொத்துக்களுக்கு நிர்வாகிகள் இருப்பது போல் இந்துக்களுக்கும் இருக்க வேண்டும். இதற்கென்று தனிவாரியம் அமைத்து,முன்னாள் ஓய்வு பெற்ற தர்ம கர்த்தாக்களை நியமிக்க வேண்டும்.
கிராம பூசாரிகள் 1146 பேருக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளதாக சொன்னார்கள். இரண்டு லட்சம் பூசாரிகள் உள்ளனர். அனைவருக்கும் ஓய்வூதியம்கொடுக்க வேண்டும், கருணை இல்லங்களுக்கு கோவில்களில் இருந்து பணத்தை தரக் கூடாது.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்களை வெளியிட மறுக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ராஜாஜி எழுதிய ராமாயணம்,மகாபாரதத்தை ஒரு ரூபாய்க்கு விற்றார்கள். எனவே இந்த புத்தகங்களை வெளியிட வேண்டும்.
356 தாழ்த்தப்பட்டவர்களின் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்கள். நான்கு லட்சம் அரிஜன கோயில்களில் உள்ளது. இந்தகோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பணம் தர வேண்டும். இந்து கோவில்களுக்கு குத்தகைதாரர் சட்டத்தில் இருந்து கோயில்களுக்கு விதி விலக்குஅளிக்க வேண்டும்.
குத்தகை வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாச்சாரியார்களுக்கும், பூசாரிகளுக்கும் சம்பளம் சம்பளம் கொடுக்கவேண்டும். கோவில் என்பது சமுதாயத்தின் சொத்து. சதாயத்தின் உயிர்நாடி. அதை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது.
ராமேஸ்வரத்திற்கும், மதுரைக்கும் அகல ரயில் பாதை விட வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சாமி சிலைகளை உடைத்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றார்ராமகோபாலன்.












Click it and Unblock the Notifications