அ.தி.மு.க.வில் பா.ம.க சேரும்...ஏ.சி.சண்முகம்
கோவை:
அ.தி.மு.க அணியில் சேர பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது என கோவையில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்து வரும் சட்டசபைப் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணி அமையும். புதிய நீதிக்கட்சி 80 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. வலுவானகட்சிகளைச் சேர்த்துக் கூட்டணி அமைக்க புதிய நீதிக்கட்சி முடிவு செய்துள்ளது.
தி.மு.க, மற்றும் அ.தி.மு.க கட்சிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளைப் போல் கொடுக்கும் இடங்களைப் பெற்று போட்டியிட மாட்டோம். எங்களதுகட்சிக்கென தனி செல்வாக்கு உண்டு.
வட மாவட்டங்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வால் கூட தனித்து போட்டியிட முடியாது.
வாழப்பாடி இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவேஅ.தி.மு.க அணியில் சேர முடிவு செய்து விட்டது. இந்த அணிக்குப் போக ஜெயலலிதாவுடன், ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனவே,வாழப்பாடி இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
ராமதாஸ் இருக்கும் அணியில், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்காது என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications