ஸ்பிக் ஊழல்: ஜெ. மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில் ரூ 28.29 கோடி ஊழல் புரிந்தது தொடர்பாக, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாமீது திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொழிலதிபர் ஏ.சி.முத்தைய்யாமற்றும் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர்நீதிபதி இவ்வழக்கு குறித்து ஜனவரி 31 ம் தேதி விசாரிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஜெயலலிதா, முத்தைய்யா, ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் மீது சாட்டப்பட்டகுற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்கள்.
இருப்பினும், ஊழல் தடுப்புச் சட்டம் 13 ஏ பிரிவின் படி இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஸ்பிக் பங்குகளை விற்றதில் அரசுக்கு ரூ 28.29 கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக இவர்கள் மேல் வழக்குத்தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.