தாராபுரம் சாமிசிலை உடைப்பு... 2 பேர் கைது
தாராபுரம்:
தாராபுரம் அருகே நடந்த சிலை உடைப்புச் சம்பவத்தில் இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தாராபுரத்தில் செவ்வாய்கிழமை இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு நடந்தது.
ஈரோடு மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அண்ணாநகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. மேலும்விநாயகருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாராபுரத்தில் பதட்ட நிலை உருவானது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பாரூக் என்ற மன்னர் பாரூக் (34), சுப்ரமணியசுவாமி தெருவைச் சேர்ந்தஜாபர் அலி (29), ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சத்தியமங்கலத்தில் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தின்படி நாங்கள்பழி வாங்க வேண்டும் என நினைத்தோம். இதன்படி தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைக்கத் திட்டமிட்டோம்என வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தாராபுரத்தில் செவ்வாய்கிழமை கடையடைப்பு நடந்தது. இந்த கடையடைப்பின் போதுஅசம்பாவிதம் ஏதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் சத்தியமங்கல சம்பவத்தில் இந்து முன்னணியினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்அடைக்கப்பட்டது போல, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. உண்மையான குற்றவாளிகளை உடனடியாககைது செய்ய வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது












Click it and Unblock the Notifications