தாமரைக்கனி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
சென்னை மருத்துவமனையில் எம்.எல்.ஏ. தாமரைக்கனி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தாமரைக்கனி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான தாமரைக்கனியின் பெயர் சமீபத்தில் மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் அடிபட்டது.
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை தாக்கியது தொடர்பாக தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு சபாநாயகர் பழனிவேல்ராஜன்பதினைந்து நாள் சிறைத்தண்டனை விதித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை உடனே விடுவிக்க உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்தத்தீர்ப்பில், தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு பதினைந்து நாள் சிறைத்தண்டனை விதித்தது செல்லும் என்று கூறப்பட்டது.
எனவே தாமரைக்கனி எம்.எல்.ஏ மீண்டும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் தாமரைக்கனி எம்.எல்.ஏ சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீறுநீரக கோளாறு காரணமாக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கைது செய்யும் நடவடிக்கை தாமதமாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications