ஒகனேக்கல்லில் வீரப்பன்?
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சந்தன வீரப்பன் பதுங்கி இருக்கக்கூடும் என எண்ணப்படுவதால் அங்கு தமிழக அரசின் ரகசியப் பிரிவு போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரும், எல்லைபாதுகாப்புப் படையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பன் இருக்கும் இடத்தை நவீன டெலஸ்கோப் பொருத்திய ஹெலிகாப்படரும்கண்காணித்து வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம், திம்மம் பகுதியில்அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை பலமாக இருப்பதால் வீரப்பன் அங்கிருந்துதப்பி ஒகேனக்கல் காட்டுப்பகுதித்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி ரகசியப் பிரிவு போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications