தமிழத்தில் விரைவில் கடன் தகவல் சேவை மையம்
ஒசூர்:
இந்திய கடன் தகவல் மையம் மற்றும் இன்டல்நெட் குளோபல் சர்வீஸ் அமைப்பு போல தமிழகத்திலும் சேவைமையங்கள் அமைக்க வீட்டு வசதி மற்றும் நிதிக் கழகம் (எச்.டி.எப்.சி) முடிவு செய்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் இவை அமைக்கப்படும் என்று கழகத்தின் நிர்வாக இயக்குநர் கேக்கி மிஸ்ட்ரிஇத்தகவைலத் தெரிவித்தார். கழகத்தின் 81-வது கிளையை ஒசூரில் திறந்து வைத்த பின்னர் அவர் பேசுகையில்,நாட்டிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள இந்திய கடன் தகவல் மையம் தனது சேவையை அடுத்த மாதம்முதல் துவக்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி, அமெரிக்காவின் டிரான்ஸ் யூனியன் மற்றும் டுன் அன்ட் பிராட்ஸ்ட்ரீட் ஆகியவற்றுடன்இணைந்து இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
ரூ. 20 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் 40 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கிவைத்திருக்கும். பிற இரு நிறுவனங்களும் தலா 10 சதவீத பங்குகளை வைத்திருப்பர் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications