ஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி
வேலூர்:
வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி நடந்ததாககூட்டுறவு இணைப் பதிவாளர் கூறியுள்ளார்.
வேலூர் கற்பகம் மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு வாங்கி விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம்ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விற்பனை பண்டகசாலை தலைவரை பதவி நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு கூட்டுறவுபண்டகசாலை இணைப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர்.
இது பற்றி மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் வெள்ளைச்சாமி கூறியதாவது:
ஷாம்பு விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக விற்பனை பண்டகசாலைதலைவரை நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். அதில் ஏழு நாட்களுக்குள்விளக்கம் அளிக்கும் படி கூறியிருந்தோம்.
ஆனால் பதிமூன்று நாட்களாகியும் பதில் அளிக்காததால் அவரை பதவி நீக்கம் செய்வதாக தபால் மூலம் தகவல்அனுப்பப்பட்டது. ஆனால் ஆள் இல்லை என்று தபால் திரும்பி வந்து விட்டது.
இந்த நிலையில் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் விளக்கம் அளிக்க ஒரு மாதம் கால அவகாசம்கேட்டிருக்கிறார். இது பற்றி மேல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications