For Daily Alerts
Just In
காதல் கைகூடியும் தற்கொலையை நாடிய ஜோடி
கோவை:
பெற்றோரை எதிர்த்து காதல் மணம் புரிந்த தம்பதி, அவர்களது பாராமுகம் காரணமாக மனம் உடைந்துகோவையில் தற்கொலை செய்து கொண்டது.
கோவையிலுள்ள இருகூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உன்னி (21). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
பட்டாம்பூச்சிகளாகத் திரிந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். வழக்கம் போல பெற்றோர்கள்எதிர்த்தனர். இருந்தாலும், காதலின் கரம் பலமாக இருந்ததால், நான்கு மாதங்களுக்கு முன் கடும் எதிர்ப்பையும் மீறிஉன்னியும், வள்ளியும் திருமணம் செய்து கொண்டனர்.
தனித்து வசித்து வந்தபோதும், பெற்றோர்களின் எதிர்ப்பும், பாராமுகமும் அவர்களை நோக வைத்தது. மனம்உடைந்த நிலையில் இருவரும் புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
Comments
Story first published: Sunday, May 28, 2000, 5:30 [IST]