பஸ் எரிப்பு .. 13 அதிமுகவினர் ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரியில் 3 மாணவிகளுடன் வேளாண்மைப் பல்கலைக் கழக பஸ் எரிக்கப்பட்டசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம், பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதைக் கண்டித்துஅ.தி.மு.க. வினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பஸ் ஒன்றை தர்மபுரி அருகே அ.தி.மு.க. வினர் சிலர் தீவைத்துக் கொளுத்தினர்.

இந்த சம்பவத்தில்,3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து 18 அ.தி.மு.கவினரைப் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், 13 அ.தி.மு.கவினர்உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் பேரில்உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர்கள் புதன்கிழமைவிடுவிக்கப்பட்டனர்.

விடுதலை ஆனவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல 30 வாகனங்களில் அ.தி.மு.கவினர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+