அரியலூர் மாவட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
சென்னை:
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட அரியலூர் என்ற 30 வது மாவட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரியலூர்மாவட்டம் 2001 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் கருணாநிதி டிசம்பர் 20 ம் தேதி கூறுகையில், அரியலூர் என்ற புதிய மாவட்டம் உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் வேண்டுகோள்விடுத்துள்ளோம். அவர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். ராகேஷ் குமார் யாதவ் அரியலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவராகஇருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் கருணாநிதி புதிய மாவட்டத்தின் முதல்நிலை செலவுகளுக்காக ரூ 15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications