திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட தடை
பாண்டிச்சேரி:
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வெளியிட வேண்டாம் என்று பாண்டிச்சேரி தலைமை தேர்தல்அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை 2001 ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி வெளியிடமுடிவு செய்திருந்தோம்.
முதலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.5.லட்சமாக இருந்தது. 72, 595 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். இது வழக்கத்தை விட அதிகமானதாகும்.கள்ள ஓட்டுக்களைத் தவிர்க்கும் வகையில் பாண்டிச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு, வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்து கணக்கெடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் குறித்த தவறான தகவல்களைக் கொடுத்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பாண்டிச்சேரியில் வசிக்கும்வேறு மாநிலத்தவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுமுன் வெளியிட வேண்டாம் என்று பாண்டிச்சேரி தேர்தல்அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.