புயல் கரையைக் கடந்தது.. சேதம் இல்லை
சென்னை:
வங்கக் கடலில் உருவான புயல் தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்தது. புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில், புயலால் கடும் மழை பெய்து வருகிறது. இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டதாகப் புகார்கள் எதுவும் வரவில்லை. நள்ளிரவில் சூறாவளிக் காற்றும், பலத்த மழையும் இருந்தது. தூத்துக்குடி கடலோரப்பகுதியிலும் பலத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நள்ளிரவில் 80 ணிதல் 85 கிலோமீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசியது. புயல் கரையைக் கடந்ததும் மழை குறைய ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ணின்னதாக வங்கக் கடலில் உருவான புயல் மன்னார் வளைகுடா வழியாக வந்தது. அங்கிருந்து தூத்துக்குடிக்கும், கன்னியாக்குமரிக்கும் இடையே வியாழக்கிழமை இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications