இன்று டெல்லி வருகிறார் ஆனந்த்
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பயணமாக டெல்லி வருகிறார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு முதல் முறையாக அவர் தாயகம் வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. டெல்லி வந்தவுடன் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனை ஆனந்த் சந்திக்கிறார்.
31 வயதாகும் ஆனந்த், கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியின்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அலெக்ஸி ஷிரோவை 3.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்பட்டத்தை வென்றார்.
ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
டெல்லி வரும் ஆனந்த்தை வரவேற்க இந்திய செஸ் சங்கம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதுதவிர,ஆனந்த்தின் ஸ்பான்சர் நிறுவனமான என்.ஐ.ஐ.டி. நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் சந்திப்புக்குப் பின் டெல்லி செஸ் வீரர்களை ஆனந்த் சந்திப்பார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசுவார். அதன் பிறகு சொந்த ஊரான சென்னைக்கு ம்ாலையில் கிளம்புகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications