ரூ.3 கோடி மோசடி ..கணவன்-மனைவி கைது
சென்னை:
சென்னையின் பிரபல மாருதி நிதி நிறுவனத்தில் ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மாருதி நிறுவனத்தின் சார்பில் சக்தி மாருதி சிட்ஸ் என்று சீட்டு கம்பெனி, பெரியமேடு பெனிபிட் பன்ட் என்ற நிறுவனங்களும் செயல்பட்டுவந்தன.
கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த நிறுவனங்களை முகுந்தன் (45) என்பவரும் அவரது மனைவி இந்திரா (40) வும் நடத்தி வந்தனர்.இதற்கிடையே திடீரென்று இந்த நிறுவனம் மூடப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு முதிர்ச்சி அடைந்த பணத்தைக் கொடுக்கவில்லை.
250 பேர்களிடம் ரூ 60 லட்சம் வரை டெபாசிட் பணம் வசூலித்ததாகவும், சீட்டு நடத்தி ரூ 2.5 கோடி வரை சுருட்டியதாகவும் இந்த நிறுவனத்தின் மீதுகுற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
போலீஸார் விசாரணை நடத்தி மாருதி நிதி நிறுவன அதிபர்கள் முகுந்தன், அவரது மனைவி இந்திரா ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டஇவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications