புயல் நிவாரண நடவடிக்கைக்கு அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டஅதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாநில வருவாய்த்துறை செயலாளர் திபேந்திரநாத் நிருபர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் உருவான புயல் தூத்துக்குடி, கன்னியாக்குமரி வழியேகரையைக் கடந்தது. புயலால் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.

புயலால் ஏற்பட்ட சேத மதிப்புக்கள் குறித்து அரசுக்கு இதுவரை முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாவட்ட அதிகாரிகளிடம்நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளோம்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நிவாரண உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். முதல் கட்டமாக புயலால் வீடுகளை இழந்தவர்களுக்குஐந்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் புடவை, வேட்டிகள் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+