For Quick Alerts
For Daily Alerts
Just In
புத்தாண்டு தினத்தன்று மத ஒற்றுமை பேரணி
பாண்டிச்சேரி:
மத ஒற்றுமையை வலியுறுத்து புத்தாண்டு தினத்தன்று, பாண்டிச்சேரி மாநில அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்அமைதிப் பேணி நடைபெறவுள்ளது.
சங்கத் தலைவர் பாலமோகன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்,அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில ஜனநாயக மகளிர் அமைப்பு, அகில இந்திய இளைஞர் கழகம், இந்தியமாணவர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த பேரணியை நடத்தவுள்ளன.
அண்ணாசாலை, வியாசல் சாலை சந்திப்பிலிருந்து இந்த பேரணி துவங்கும். பேரணி முடிவில் கலை நிகழ்ச்சிகள்நடைபெறும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]