ஆந்திராவில் கள் அருந்திய 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் மலமீடப்பள்ளி என்ற கிராமத்தில் விஷ கள்அருந்திய 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
வியாழக்கிழமை மாலை முதலே இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் கள் அருந்திவந்துள்ளனர். ஆனால் அது விஷத் தன்மை கொண்டதாக இருந்தது யாருக்கும்தெரியவில்லை. வெள்ளிக்கிழமை காலை சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அனைவரும் கதிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் இறந்தனர். 10 பேரின் நிலை அபாய கட்டத்தில்இருக்கிறது.
மாநில வருவாய்த்துறை அமைச்சர் நாகேஸ்வர் ராவ் உள்பட மாவட்டஅதிகாரிகள்சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications