நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ..
சேலம்:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்கள், விவசாயிகளின் கடனை ரத்துசெய்வோம். இதனையே தேர்தல் வாக்குறுதியாக அளிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பிறகுஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கிகளுக்கு வராக் கடன்களாக 63 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இந்த வராக்கடன்கள் தவிர நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், கோடிக் கணக்கில் நஷ்டத்தில்இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு வகையில் இழப்புகள்அதிகரித்து வருகின்றன.
இதனையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் மத்திய மாநில அரசுகள், மிகவும்பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கடன் வசூலை மட்டும்விட்டு வைக்காமல் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு கெடுபிடியாக வசூலிக்கின்றனர்.
எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களின் நலன் கருதி இவர்களின் கடன்களைரத்து செய்வோம். இந்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளோம்.பருத்திக்கு கட்டுபடியாகும் விலை அளிப்பதுடன், நெசவாளர்கள் பாதிப்படையாமல்இருக்க நூல் விலையில் அரசு மானியம் வழங்க வேண்டும்.
அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி குறித்து ஜனவரி 3-ம் தேதி சென்னையில்நடக்கவிருக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசவுள்ளோம். புதிய கூட்டணி,பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் பேரில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதிய நீதிக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பிப்ரவரி மாதம் 18-ம் தேதிசென்னை சீரணித் திடலில் நடக்கவுள்ளது.
அ.தி.மு.க., த.மா.கா கூட்டணியில் நாங்கள் இடம் பெற வேண்டும் எனதிருமாவளவன் கூறியுள்ளார். இது அவரது கருத்து, ஆசையாக இருக்கலாம். ஆனால்,திருமாவளவனே எங்களது கூட்டணிக்குத் தான் வரவிருக்கிறார்.
எங்கள் கட்சியால், தி.மு.க, அ.தி.மு.க. இரு கட்சிகளுக்குமே நஷ்டம். ஏனெனில் இந்தஇரு கட்சிகளிலிருந்தும் பெருமளவு தொண்டர்கள் எங்கள் கட்சிக்கு வந்துகொண்டிருக்கின்றனர் என்றார் ஏ.சி.சண்முகம்.












Click it and Unblock the Notifications