தொடரும் சிலைகள் உடைப்பு .. பதட்டத்தில் நெல்லை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பல கோயில் சிலைகள்உடைக்கப்பட்டன. அந்த பதட்டம் தணியும் மீண்டும் வெள்ளிக்கிழமையும் கோயில்சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
சென்ற வாரம் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 4 கோயில்களில்கோயிலின் சுற்றுச்சுவர்கள் உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த சிலைகள், பீடங்கள்உடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து ஈரோடு மாவட்டம் தாராபுரத்திலும்கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிஅடைய வைத்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
புதன்கிழமை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதாகட்சித் தலைவர் கிருபாநிதி உட்பட பல தலைவர்கள் நெல்லையில் சிலைகள்உடைக்கப்பட்ட கோயில்களை பார்வையிட்டனர். இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் கடையடைப்பு நடத்தப்படும் எனஅறிவித்தனர்.
இதன் படி இந்து முன்னணி அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுவோருக்கு மைக்,ஒலிபெருக்கி போன்றவற்றை உபயோகிக்க போலீசார் அனுமதி மறுத்தனர்.
போலீசாரின் இந்த போக்கை கண்டித்தும், சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யக் கோரியும் நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணியினர். கடையடைப்பிற்குஅழைப்பு விடுத்திருந்தனர்.இந்த கடையடைப்பு வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த அழைப்பிற்கு ஒரளவு மட்டுமே ஆதரவு காணப்பட்டது. இந்நிலையில்மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டது.
மேலப்பாளையம் மேத்தமார்பாளையம் செக்கடி தெருவில் இருக்கும் பிள்ளையார்சிலையின் இடுப்பு பகுதி உடைக்கப்பட்டு சிலையும் கீழே தள்ளப்பட்டிருந்தது.இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைப்பால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல்நடத்தினர். இதனால் இரண்டு பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. போலீசார்விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிலை உடைப்பில் சம்பநத்தபட்டதற்காக இருவரைபோலீசார் கைது செய்தனர். முந்தைய சிலை உடைப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.