For Daily Alerts
Just In
ஆதரவற்ற குழந்தைகளுடன் மூப்பனார் விருந்து
சென்னை:
புத்தாண்டு பிறக்கவிருப்பதையொட்டி, சென்னையிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குச் சென்றுஅங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இனிப்புகள் வழங்கினார். அவர்களுடன்விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அன்பு இல்லம் என்ற அந்த இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு இனிப்பும், விருந்தும்அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி, சென்னை கிறிஸ்துநண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மூப்பனார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, ஒரு சிறுவனும், சிறுமியும் பொக்கே கொடுத்து வரவேற்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, December 30, 2000, 5:30 [IST]