For Daily Alerts
Just In
குழவியால் அடித்து மனைவியைக் கொன்ற கணவர்
மதுரை:
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை ஆட்டுக்குழவியால் அடித்துக் கொலை செய்தார்.
மதுரையைச் சேர்ந்தவ் நாகராஜன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி (23). நாகராஜன், கார் டிரைவராக இருந்துவருகிறார்.
புவனேஸ்வரியின் நடத்தை குறித்து நாகராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன்,மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமையும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்தநாகராஜன், வீட்டிலிருந்த ஆட்டுக் குழவியை எடுத்து புவனேஸ்வரி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில்புவனேஸ்வரி அங்கேயே இறந்தார்.
மனைவியைக் கொன்றவுடன் நாகராஜன் தப்பி விட்டார். தகவலறிந்த போலீஸார், விரைந்து வந்து, தலைமறைவாகிவிட்ட நாகராஜனைத் தேடிக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, November 12, 2000, 5:30 [IST]