உற்பத்தி முறையை மாற்ற கைத்தறி நெசவாளர்களுக்குக் கோரிக்கை
காஞ்சிபுரம்:
கைத்தறி நெசவாளர்கள் தங்களது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில், பொதுமக்களின்திருப்தியை பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்கூறினார்.
காஞ்சிபுரத்தில், வைகோ பட்டு கைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களது உற்பத்தியை கைத்தறி நெசவாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பொதுமக்களைத் திருப்திப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம்.
கைத்தறிப் பிரிவில் உற்பத்தி முறைகள் மாறினால்தான், நமது நாட்டு கைத்தறிப் பொருட்களை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்ய முடியும்.
காஞ்சிபுரத்தில், தேசிய ஆடை வடிவப்ைபு மையம் ஆரம்பிக்கப்படும். சேலத்தில் உள்ளதைப் போல இதுஅமையும். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஜவுளிக் கழகத்திற்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில், ஜவுளி ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால்மூடப்படும் நிலையில் உள்ளன.
தமிழகத்திற்கு அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி கொடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சேதுசமுத்திரம்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.