மருமகள் கொலை, பேரனுக்கு அடி .. பெண் தலைமறைவு
சென்னை:
மருமகள் மீது ஏற்பட்ட கோபத்தால் மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றமாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் மஸ்தூர் வேலை செய்து வருபவர் சேவியர் (36). இவரதுமனைவி கிரேஸ் ஹெலன் (34). இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம்செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஜெயராஜ் என்ற 6 வயது மகனும் உண்டு.
இவர்கள் சென்னை பதுவண்ணாரப்பேட்டையில் இருக்கும் துறைமுக தொழிலாளர்குடியிருப்பில் வசித்து வந்தனர். ஹெலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால்சேவியரின் தாய் வெள்ளைத்தாய்க்கு (56) மருமகள் மீது வெறுப்பு இருந்து வந்தது.அவர் மகன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டைநடப்பது வழக்கம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை மகன் வீட்டில் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார்வெள்ளைத்தாய். திங்கள்கிழமை முதல் மாமியார் மருமகள் சண்டை மீண்டும்துவங்கியது. அன்று முதல் தினமும் இருவருக்கும் சண்டை இருந்து வந்தது. இது பற்றிதன் கணவரிடம் கூறினார். ஹெலன். ஆனால் இதை கண்டும் காணாமல்விட்டுவிட்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சேவியர் வேலைக்கு சென்ற பின்புமாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றுமில்லாத அளவு உச்சகட்டத்தைஅடைந்தது.
மருமகள் மீது பெரும் ஆத்திரம் கொண்ட வெள்ளைத்தாய் வீட்டிலிருந்த பலமானஇரும்புக் கம்பியால் மருமகள் தலைமீது ஓங்கி ஒரு போடு போட்டார். ஹெலன்வலியால் துடிதுடித்து அலறியபடியே கீழே விழுந்தார்.
ஜெயராஜ் ஓடிவந்து தாயின் நிலை பார்த்து அழுதான். அவனுக்கும் இரும்பு கம்பியால்அடி விழுந்தது. மீண்டும் மருமகளை அடிக்க திரும்பினார் வெள்ளைத்தாய். கீழே ரத்தம்குபு குபுவென பொங்கிய நிலையில் தலை பிளந்து இறந்து கிடந்தார் ஹெலன்.
நிலைமையின் விபரீதம் புரிந்ததும் அங்கிருந்து ஓடினார் வெள்ளைத்தாய். அவர்ஓடுவதை பார்த்த அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இரும்பு கம்பியால் அடிவாங்கிய சிறுவன் ஜெயராஜுக்கு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான வெள்ளைத்தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications