நாங்கள் தொல்லையில்லாத கட்சி .. கூறுகிறார் ராமதாஸ்
திருவள்ளூர்:
தேசிய ஜனநாகக் கூட்டணியிலேயே தொல்லை தராத கட்சி பாட்டாளி மக்கள்கட்சிதான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருத்தணி அருகே உள்ள ஆர்.ஆர். பேட்டையில் பா.ம.க.வின் 226-வது தொகுதிமாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் இன்னும் 8தொகுதிகளில் மட்டும் மாநாடு நடத்தப்பட வேண்டும்.
பா.ம.க,வை,. வன்னியர் கட்சி என கூறி வந்தனர். ஆனால் இந்த கட்சி கூட்டத்திற்குதென் மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது. பொதுகூட்டத்தில் ஏராளமானபெண்களும் வந்து கலந்து கொண்டனர்.
தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆண்டுவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 கட்சிகள் தோன்றிாலும் மக்கள்பா.ம.க.வைத்தான் வரவேற்கிறார்கள்.
பா.ம.க ஆதரவால்தான் டெல்லியில் ஆட்சி 7 மாதம் நீடித்தது. எந்த விதமானதொந்தரவும் தராத கட்சி பா.ம.க. என பிரதமர் பாராட்டியுள்ளார்.
பா.ம.க. இருந்த கூட்டணியில்தான் வந்து இணைந்தது தி.மு.க. தேசிய ஜனநாயககூட்டணியில் பா.ம.க. இருக்கிறது. யாரை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் நாங்கள்கூட்டணியில் தொடர்ந்த நீடிப்போம்.
வரும் 2006-ம் ஆண்டு தமிழகதிதல் பா.ம.க. ஆட்சி அமைக்கும். இன்னும் 90நாட்களில் பாண்டிச்சேரியில் வன்னியர் ஒருவர் முதல்வராக வருவார், எல்லாஜாதியைச் சேர்ந்தவர்களும் முதல்வராக வந்து விட்டனர்.
பாண்டிச்சேரியில் 100-க்கு 60 சதவிகிதம் பேர் வன்னியர்கள். பெரும்பான்மையினர்ஆள வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான்ஜனநாயகம்.
இங்கு விவசாயிகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் வாழ்வா சாவா எனபோராடி வருகின்றனர்,
நெல் விலை ஏறவில்லை ஆனால் பூச்சி மருந்து, டிராக்டர், உரம் போன்றவற்றின் விலைஏறிவிட்டது. விவசாயிகள் கடன்காரர்களாகி விட்டார்கள்.
நம் பெயரைச் சொல்லி அரசு கடன் வாங்குகிறது. விவசாயி கடனை கட்டாவிட்டால்அவர்கள் வீட்டை அரசு ஜப்தி செய்கிறது. கரும்பு விலையை உயர்த்தச் சொன்னால்அதை பிழிந்து அதன் பிறகு மத்தியில் விலை நிர்ணயம் என கூறுகின்றனர்.
நெசவு தொழிலும் இங்கு நலிந்து விட்டது. துணியை யாரும் வாங்குவதில்லை .ஆனால் அயல்நாடுகளில் பவானி ஜமக்காளம்தான் விற்பனையாகிறது என்றார்.












Click it and Unblock the Notifications