கோவில்களை காக்க ஆள் சேர்க்கிறது இந்து முன்னணி
கோவை:
இந்துக் கோயில்களைப் பாதுகாக்க 12 ஆயிரம் இளைஞர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்போவதாக இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காரமடையில் ஆலய மறுமலர்ச்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்று பேசியதாவது:
தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு லட்சம் கோயில்கள் தொடர்ந்து கேட்பாரற்று கிடக்கிறது. இந்தக் கோயில்களைசீரமைத்து அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்படும்.
குழந்தைகளுக்குக் கம்பராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்கள், மகான்கள் அருளிய பல ஆன்மீகக் கதைகளைசொல்லித் தர வேண்டும். அப்போது தான் சமுதாயக் குற்றங்கள் குறையும்.
திருச்சியில் முதல் முறையாக பாரதிய பண்பாட்டு கல்லூரி ஒன்றைத் துவங்க உள்ளேன். தமிழகத்தில் 12 ஆயிரம்பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கு ஒருவர் என்ற நிலையில் வைத்தாலும் கூட 12 ஆயிரம்தர்ம வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு கோயில்களைப் பாதுகாக்க பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர குடும்பத்திற்கு ஒருவரை எங்களிடம் அனுப்பி வையுங்கள். அவருக்கு 6 மாத கால பயிற்சிஅளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு மாதம் ரூ.500 வீதம் 3 ஆண்டுகளுக்குஅளிக்கப்படும் எனப் பேசினார் ராமகோபாலன்.