For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்: வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

கோட்டயம்:

இந்திய நாட்டுக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

கேரள மாநிலம் குமரகத்தில் ஓய்வு எடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தைத் தகர்க்கப்போவதாக லஸ்கார் ஈ தொய்பா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த இயக்கம் பாகிஸ்தானில் தளம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆகவே எனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலில் பாகிஸ்தானுக்கும்பங்கு உள்ளது. என்னைத் தீவிரவாதிகள் தாக்குவார்களோ அல்லது கொலை செய்து விடுவார்களோ என்று நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான்இந்தியாவுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

பக்கத்து நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நம்மைக் குறுக்கு வழியில் ஏமாற்றி விடலாம் என்றுநினைப்பவர்களுக்குத் தோல்விதான் மிஞ்சும் என்றார் வாஜ்பாய்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X