நெட் இணைப்புக் கொடுக்க களமிறங்குகிறது பாரத் சஞ்சார் நிகாம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இன்டர்நெட் இணைப்புக் கொடுக்க களத்தில் இறங்கிறது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்த இணைப்பு முதல்முறையாக கோவையில் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இன்டெர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் போட்டா போட்டியில்இறங்கியுள்ளன. விஎஸ்என்எல், டிஷ்நெட், சத்யம் ஆகியவை இந்த இணைப்புகளை வழங்கி வருகிறது.விஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்ம் இப்போது இணைப்புக் கொடுக்க முடிவு செய்துள்ளது.பாரத் சஞ்சார் நகாம் லிமிடெட் எனப்படும் இந்திய தொலைத் தொடர்புத் துறை, கோவையில் இன்டர்நெட்இணைப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

புத்தாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான துவக்க விழா கோவையில் நடந்தது இந்த விழாவில்தமிழ்நாடு வட்ட தன்மை பொது மேலாளர் முகமது யாசீன் பேசியதாவது:

கோவையில் இதுவரை விஎஸ்என்எல் இணைப்பை பெறவும், பாஸ்வேர்ட், புதுப்பித்தல் ஆகியவற்றிற்காகவும்சென்னைக்கு மனுச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இப்போது கோவையிலேயே இந்தஇணைப்பை பெற முடியும். இதற்காக ரூ. 50 லட்ச ரூபாயில் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர தமிழகத்தில் 15000 இன்டர்நெட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில்5000 இணைப்புகள் கோவையில் வழங்கப்பட்டுள்ளன.

கோவை, மதுரை ஆகிய நகரங்களில் அரசு செல்போன் வரும் பிப்ரவரி மாத இறுதியில் வழங்கப்படும். முதலில்1000 இணைப்புகள் சோதனை அடிப்படையில் வழங்கப்படும். பின்னர் இது விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் நடப்பாண்டில் இரண்டரை லட்சம் டெலிபோன் இணைப்புகள் வழங்க கருவிகள் நிறுவப்பட்டன.தற்போது 1.91 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 57 டெலிபோன் எக்சேஞ்சுகள்நிறுவப்பட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+