நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குப் புலிகள் தயாராகுமா?
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண, விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுன்வந்தால் அதை இலங்கை அரசு வரவேற்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அனுராதா ரத்வத்தேசெவ்வாய்க்கிழமை கூறினார்.
அதுதவிர, சண்டை நடக்கும் இடத்தில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்தும் இலங்கை அரசு முயற்சிமேற்கொள்ளும் என்றார்.
தலைநகர் கொழும்பில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சண்டைநிறுத்தத்தைஅறிவித்துள்ளார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் கடந்த காலங்களில் இதே போன்று ஆயுத பலங்கள்குறைந்திருக்கும் போது மட்டுமே புலிகள் சண்டைநிறுத்தம் அறிவிப்பார்கள். இதனால் இலங்கை அரசுக்குஏமாற்றமே மிஞ்சியது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் புலிகளின் சண்டைநிறுத்தத்திற்குபின்னணியில் உள்ள விஷயங்களை ஆராய்ந்து வருகிறது இலங்கை அரசு.
மேலும் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ள புலிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அமைதிப் பேச்சுவார்த்தைக்குத்தயாராக வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசும் சண்டை நிறுத்தத்தை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்கும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்கள், புலிகளுடன் சண்டை போடுவது இலங்கையிலுள்ள பெரும்பான்மைமக்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காகத்தான். புலிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களை இலங்கை ராணுவவீரர்கள் சண்டையிட்டு கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள்.
இலங்கையில் வாழும் பெரும்பான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் ராணுவ வீரர்கள்சண்டையிட்டு வருகிறார்கள் என்றார்.
இலங்கை சட்டத்துறை அமைச்சர் பெரிஸ் கூறுகையில், விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குதயார் என்றால் மட்டுமே இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் ஆயத்தங்களில் இறங்கும்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தைகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் சண்டைநிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications