நினைத்தால் சாதிக்கலாம்
நாமக்கல்:
நாமக்கல்லைச் சேர்ந்த 10 வயது மாணவி "திருக்குறள் மணி பட்டம் பெறுகிறார். ஓராண்டாக உழைத்து,திருக்குறளை மனப்பாடம் செய்த இந்த மாணவி, திருக்குறளை எப்படிக் கேட்டாலும் பதிலளிக்கிறார். "நினைத்தால்சாதிக்கலாம் என்பதை ஓராண்டில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள வேதலோக வித்யாலாயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவரும் மாணவி வினோதினி. இவரது தந்தை பழனிச்சாமி, பள்ளப்பாளயைத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் வீட்டு வசதி வாரியப் பொறியளராகஉள்ளார்.
இந்த மாணவி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று முதல்வர் கருணாநிதி, கன்னியாகுமரியில் 133 அடி உயரசிலையை திறந்து வைத்து திருக்குறள் படிப்போருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனஅறிவித்தார்.
இந்த அறிவிப்பையும், சிலை திறப்பு நிகழ்ச்சியையும் தொலைக் காட்சியில் கண்டு களித்த வினோதினி, இதனைசெயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் களத்தில் இறங்கினார்.
ஓராண்டிற்குள் திருக்குறள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். இப்போது திருக்குறளை எப்படிக் கேட்டாலும்சொல்லும் அளவிற்குத் திறமை பெற்றுள்ளார். ஒரு அதிகாரத்தைக் கூறினால், அந்த அதிகாரத்தில் உள்ள 10குறள்களையும் ஒப்பிவிக்கிறார். குறளில் வரும் பறவை, மிருகம், அவற்றின் உறுப்புகள் என எதைச் சொன்னாலும்,அந்தக் குறளை இவர் உடனடியாகக் கூறுகிறார்.
கடந்த டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் நடந்த மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் இவர்அனைத்து திருக்குறள்களையும் ஒப்புவித்தார். பின்னர் டிசம்பர் 24 தல் 30ம் தேதி வரை நடந்த திருக்குறள் பயிற்சிமுகாமில் பங்கேற்றார். இந்த பயிற்சி முகாமின்போது, இவருக்கு "திருக்குறள் மணி மற்றும் இளம் திருக்குறள்தூதர் என்ற இருபட்டங்களை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி திருவள்ளுவர் பிறந்த நாளில் வழங்கப்படவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.