அட, தக்காளிப்பழத்தில் சிலுவை
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் தக்காளிப் பழத்தை வெட்டிப் பார்த்த போது அதில் சிலுவை வடிவம் தெரிந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார்.
குடும்பத்துடன் தங்கி இருந்த அவர் சமையல் செய்வதற்காக வேளாங்கண்ணியில் தக்காளிப்பழம் வாங்கினார். அவற்றை இரண்டாக வெட்டிக் கொண்டிருந்தபோது ஒரு தக்காளிப் பழத்தின் உள்ளே சிலுவை தோற்றம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைப் பார்த்த ஹேமநாதன் தான் கொண்டு வந்திருந்த சிலுவையும், தக்காளியில் இருந்த சிலுவையின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதையும் பார்த்தார்.பின்னர் அந்தத் தக்காளிப் பழத்தை பங்குத் தந்தை அருள் இருதயத்திடம் கொண்டு வந்து காட்டினார். வேளாங்கண்ணி முழுவதும் இவ்விஷயம் பரபரப்பாகப்பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications