நேபாளத்தில் கொய்ராலா அரசு பிழைக்குமா?

Subscribe to Oneindia Tamil

காட்மாண்டு:

நேபாள பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடக்கிறது.

நேபாளத்தில் நடிகர் ரித்திக் க்ரோஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலியானார்கள்.பின்னர் வேலை நிறுத்தப் போராட்டம் கடைபிடிக்கப்பட்டது.

இதனால் நேபாளம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. நேபாளத்தில் நேபாள காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கிரிஜா பிரசாத் கொய்ராலாபிரதமராக இருந்து வருகிறார். அவரது ஆட்சிக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தில் 205 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 113 பேர். இவர்களில் 56எம்.பி.க்கள் பிரதமர் கொய்ராலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனால் பிரதமர் கொய்ராலா அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இதன் மீதான விவாதம்மட்டும் வாக்கெடுப்பு நடக்கிறது.

ஆனால் ஆளுங்கட்சிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் கொய்ராலா அரசு கவிழாது என்றும், போர்க்கொடி தூக்கியுள்ள 56எம்.பி.க்களில் 4 எம்.பி.க்கள் கொய்ராலா அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+