பண்ணை வீட்டுக்கு வந்தார் ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீண்டும் தனது பண்ணை வீட்டிற்கு வந்தார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை தொட்டகாசனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆட்கள் கடத்திச் சென்றனர். 108நாட்கள் வீரப்பனது பிடியிலிருந்த பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கன்னட நடிகர் ராஜ்குமார் மீண்டும் தொட்டகாசனூர் வந்தார். அவரது மனைவியுடன் காரில் வந்த அவர், பண்ணை வீட்டைச்சுற்றி பார்வையிட்டார். அங்கு அவரைக் காண பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். அவருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், 24 மணி நேரம் அவரது பண்ணையைச் சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications