சிறந்த மாநிலம் தமிழகம்- சிறந்த மாநகராட்சி சென்னை
சென்னை:
மக்கள் தொகை கட்டுப்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகமும், சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கான விருதுகளை பெற அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், மேயர் ஸ்டாலினும் டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றனர். மக்கள் தொகையைகட்டுப்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் புதன்கிழமை நடக்கிறது.
இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்குவிமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்.
இதே போன்று இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய வகையிலும், போலியோ நோயை முற்றிலும் ஒழித்ததற்காகவும் சிறந்தமாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
இதை Population fundamental of India என்ற அமைப்பு தேர்வு செய்தது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் டெல்லியில் புதன்கிழமை வழங்குகிறார்.
இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக சென்னை மாநகர மேயர் மு.க .ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலைவிமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும் சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு சால்வை அணிவித்து மாறன், ஆற்காடு வீராச்சாமி, ஸ்டாலின்ஆகியோரை வழியனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் அமைச்சர் சமய நல்லூர் செல்வராஜ், சைதை கிட்டுஎம்.எல்.ஏ பரிதி இளம் வழுதி, எம்.பலராமன், அன்பரசன், எஸ்.ஆர் ராஜா விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தனர்.