For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்கேல் ஜாக்சனிடம் உதவி கேட்கிறார் உலகிலேயே உயரமான பெண்

By Staff
Google Oneindia Tamil News

இன்டியானா போலிஸ் ( அமெரிக்கா):
உலகிலேயே மிகவும் உயரமான பெண் என்ற பட்டத்தைப் பெற்ற பெண் சான்டே ஆலன், பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனிடம் பிசியோதெரபிமூலம் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:

உலகிலேயே மிகவும் உயரமான பெண் என்ற பெருமை சான்டே ஆலனைச் சேரும். இவரது உயரம் 7 அடி 4 சென்டி மீட்டர். உலகிலேயே மிக உயரமானபெண் என்பதால் இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆலன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் கீழே விழுந்து விட்டதால் காலில் உள்ள தசைகள்செயலிழந்து விட்டன. இதனால் கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாகி விட்டார் ஆலன். அவரால் தற்போது நடக்க முடியாது. இவருக்கு வயது 45.

அவர் மிகவும் உயரமாக இருந்ததால் அவருக்கு, அவரது 21 வயதில் பிட்டியூட்டரி சுரப்பியில் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால்அவருக்கு செயற்கை கால்களையும் பொருத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை மூலம் காலை குணப்படுத்தலாம் என்றும்,சிகிச்சைக்குப் பின் எழுந்து நடக்கலாம் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, பாப் இசையில் மட்டுமின்றி, பிசியோதெரபி சிகிச்சையிலும் சிறந்து விளங்கும் மைக்கேல் ஜாக்சனிடம் உதவி கேட்டிருக்கிறார் ஆலன்.அதாவது பிசியோதெரபி மூலம் தனக்கு சிகிச்சையளித்து தனது காலை குணப்படுத்தும் படி மைக்கேல் ஜாக்சனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்தஉயரமான பெண்மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X