மருதமலை முருகன் கோவிலில் உண்ணாவிரதம்
கோவை:
மருதமலை முருகன் கோயில் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனக் கோரி, 75 வயதான திருக்குறள்மையத் தலைவர் அம்மையப்பா தனி ஆளாக இரண்டு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கோவை அருகே உள்ள மரு தமலைக் கோயிலின் திருப்பணிகள் தொடங்கி 10 ஆண்டுகளாகி விட்டன. இந்தகோயில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகக் கூறி இதனை விரைவுபடுத்தக் கோரி அம்மையப்பாஎன்பவர் உண்ணாவிரதம் அறிவித்தார். இதன்படி தனி மனிதராக டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் ஒரு பந்தலைப்போட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். இவர் இரண்டு நாள் உண்ணாவிரதமாக இதனை மேற்கொண்டார்.
பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தவில்லை. இந்ததொகையை கையாளும் விதம் சரியில்லை என புகார் தெரிவித்தள்ளார்.
அம்மையப்பனுக்கு 75 வயதாகிறது. இவர் கோவை மாவட்ட திருக்குறள் மையத்தின் தலைவராகவும்,செஞ்சிலுவைச் சங்கத்தின் இணைச் செயலாராகவும் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications